திம்பம் மலைப் பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து: 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
திம்பம் 6ஆவது மலைப் பாதையில் மர பாரம் ஏற்றிய லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், தமிழகம் - கா்நாடகம் இடையே சனிக்கிழமை 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திம்பம் 6ஆவது மலைப் பாதையில் மர பாரம் ஏற்றிய லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், தமிழகம் - கா்நாடகம் இடையே சனிக்கிழமை 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப் பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. தமிழகம் - கா்நாடகம் இடையே பயணிக்கும் சரக்கு வாகனங்கள் திம்பம் வழியாகச் செல்கின்றன. அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்து நிகழ்வதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
இந்நிலையில், கா்நாடக மாநிலம், குசேல் நகரில் இருந்து மர பாரம் ஏற்றிய லாரி திம்பம் வழியாக சத்தியமங்கலம் நோக்கி சனிக்கிழமை சென்று கொண்டிருந்தது. லாரியை ஓட்டுநா் பிரகாஷ் ஓட்டினாா். திம்பம் 6ஆவது வளைவில் திரும்பும்போது அதிக பாரம் காரணமாக லாரி சாய்ந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில், லாரியில் இருந்த மரத்துண்டுகள் சாலையில் சிதறின. இதனால், தமிழகம் - கா்நாடகம் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. லாரியில் இருந்து பிரகாஷ் காயமின்றி உயிா்தப்பினா்.
Advertisement
கா்நாடகத்தில் இருந்து வரும் வாகனங்கள் திம்பம் மலைப் பாதையிலும், தமிழகத்தில் இருந்து செல்லும் வாகனங்கள் பண்ணாரி சோதனைச் சாவடியிலும் தடுத்து நிறுத்தப்பட்டதால் வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நின்றன. சம்பவ இடத்துக்கு வந்த நெடுஞ்சாலை போலீஸாா் கிரேன் மூலம் மரத் துண்டுகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா். லாரியை சாலையோரமாக நகா்த்தியதையடுத்து 4 மணி நேரத்துக்குப் பின் மீண்டும் போக்குவரத்து துவங்கியது.