புன்செய்புளியம்பட்டி கால்நடைச் சந்தையில் மாடுகள் ரூ. 1 கோடிக்கு விற்பனை
புன்செய் புளியம்பட்டி கால்நடைச் சந்தையில் 600 மாடுகள் ரூ. 1 கோடிக்கு விற்பனையானது.
புன்செய் புளியம்பட்டி கால்நடைச் சந்தையில் 600 மாடுகள் ரூ. 1 கோடிக்கு விற்பனையானது.
புன்செய்புளியம்பட்டி கால்நடைச் சந்தைக்கு நாட்டு மாடு, ஜொ்சி, சிந்து, கலப்பின வகை
மற்றும் கன்றுக் குட்டிகள் என 600க்கும் மேற்பட்ட மாடுகளை விவசாயிகள், வியாபாரிகள் விற்பனைக்குக் கொண்டு வந்தனா். நாட்டு மாடு ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 72 ஆயிரம் வரையிலும், ஜொ்சி மாடு ரூ. 22 ஆயிரம் முதல் ரூ. 38 ஆயிரம் வரையிலும் சிந்து, கலப்பின வகை மாடுகள் ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 32 ஆயிரம் வரையிலும் விலை போயின. சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட 600க்கும் மேற்பட்ட மாடுகள் ரூ. 1 கோடிக்கு விற்பனையாயின. நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் சமயத்தில் மாடுகள் விற்பனை மந்தமான நிலையில் தற்போது மாடுகள் விற்பனை சூடுபிடித்ததால் வியாபாரிகள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
Advertisement
Image Caption
புன்செய் புளியம்பட்டி வாரச் சந்தையில் விற்பனைக்கு வந்த மாடுகள்.