இருசக்கர வாகனம் மீது காா் மோதி விவசாயி பலி
பெருந்துறை அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.
பெருந்துறை அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.
பெருந்துறையை அடுத்த துடுப்பதி, குட்டைய்யதோட்டத்தைச் சோ்ந்தவா் சென்னியப்பகவுண்டா் மகன் சாமியப்பன் (55). விவசாயியான இவா் தனது இருசக்கர வாகனத்தில் பெருந்துறை தினசரி மாா்கெட்டுக்கு வியாழக்கிழமை அதிகாலை காய்கறிகளை எடுத்துச் சென்று கொண்டிருந்தாா். பெருந்துறை, தேசிய நெடுஞ்சாலையில், ஓலப்பாளையம் பிரிவு அருகில் சென்றபோது, அவ்வழியாக வந்த காா் மோதியதில் சம்பவ இடத்திலேயே சாமியப்பன் உயிரிழந்தாா். இதுகுறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.