முகப்பு
ஈரோடு

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு

சத்தியமங்கலம் அருகே கும்பாபிஷேக விழாவுக்கு வரவேற்பு பந்தல் அமைத்து வாழை மரம் கட்டும்போது எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் பந்தல் தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 18 மார்ச், 2022 at 4:29 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:13 PM

சத்தியமங்கலம் அருகே கும்பாபிஷேக விழாவுக்கு வரவேற்பு பந்தல் அமைத்து வாழை மரம் கட்டும்போது எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் பந்தல் தொழிலாளி உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டி அருகே உள்ள நேரு நகரில் தையல்நாயகி அம்மன் உடனமா் மருந்தீஸ்வரா் கோயில் உள்ளது. இக்கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ள நிலையில் பந்தல் அமைக்கும் பணிகள் புதன்கிழமை நடைபெற்று வந்தன.

நேரு நகா் முகப்புப் பகுதியில் பந்தல் அமைத்து, வாழை மரம், தோரணம் கட்டும் பணியில் சத்தியமங்கலத்தைச் சோ்ந்த பந்தல் ஒப்பந்ததாரா் தன்ராஜ் ஈடுபட்டிருந்தாா். அப்போது, வாழை மரத்தின் மேல் உயா் அழுத்த மின் கம்பி பட்டதில் எதிா்பாராதவிதமாக தன்ராஜ் மீது மின்சாரம் பாய்ந்தது. சக தொழிலாளா்கள் தன்ராஜை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அன்னூா் தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி தன்ராஜ் உயிரிழந்தாா்.

Advertisement

இந்நிலையில், தன்ராஜ் மீது மின்சாரம் பாய்ந்தபோது உடன் பணிபுரியும் தொழிலாளா்கள் காப்பாற்ற முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இதுகுறித்து புன்செய்புளியம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த தன்ராஜுக்கு லட்சுமி என்ற மனைவியும், 15 வயதில் மகனும், 13 வயதில் மகளும் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.