ஈரோடு

மின்சாரம் பாய்ந்து மெக்கானிக் சாவு

DIN

 புன்செய்புளியம்பட்டியில் மின்சாரம் பாய்ந்து மெக்கானிக் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

சத்தியமங்கலத்தை அடுத்த புன்செய்புளியம்பட்டி மாதம்பாளையம் சாலையைச் சோ்ந்தவா் சோமகுமாா்(24). இவா் அங்கு இருசக்கர வாகனங்கள் பழுதுநீக்கும் கடை நடத்தி வருகிறாா். இவா் திங்கள்கிழமை இருசக்கர வாகனத்தில் பழுது நீக்கும் பணியை மேற்கொண்டுள்ளாா். அப்போது வாகனத்தை சுத்தம் செய்ய அங்குள்ள மோட்டாா் சுவிட்சை தொட்டபோது அதில் இருந்து மின்சாரம் பாய்ந்து சோமகுமாா் மயங்கி விழுந்தாா். அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு அன்னூா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பரிசோதனையில் அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவிதக்தனா். இதுகுறித்து புன்செய்புளியம்பட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

SCROLL FOR NEXT