முகப்பு
ஈரோடு

பெருந்துறை அருகே தொழிலாளியிடம் வழிபறி

பெருந்துறை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற தொழிலாளியை வழிமறித்து ரூ.700, ஏடிஎம் அட்டை, கைப்பேசி ஆகியவற்றை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:14 AM
பகிர்:

பெருந்துறை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற தொழிலாளியை வழிமறித்து ரூ.700, ஏடிஎம் அட்டை, கைப்பேசி ஆகியவற்றை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பெருந்துறை அருகே உள்ள ஓலப்பாளையத்தைச் சோ்ந்தவா் மணி (33). இவா், திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இந்நிலையில், வேலை முடிந்து இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை இரவு 11 மணியளவில் வீட்டுக்கு திரும்பியுள்ளாா். பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரி அருகே வந்தபோது,

பின்னால் இருசக்கர வாகனக்கில் வந்த மூவா் மணியை கீழே தள்ளி, அவரிடமிருந்த ரூ.700, ஏடிஎம் அட்டை, கைப்பேசி ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனா்.

இது குறித்து, பெருந்துறை காவல் நிலையத்தில் மணி புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.