ஈரோடு

தமிழகத்தில் தக்காளி வைரஸால் யாரும் பாதிக்கப்படவில்லை: சுகாதாரத் துறைச் செயலா் ராதாகிருஷ்ணன்

DIN

 தமிழகத்தில் தக்காளி வைரஸால் யாரும் பாதிக்கப்படவில்லை என்று சுகாதாரத் துறைச் செயலா் ராதாகிருஷ்ணன் கூறினாா்.

கோவை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் கட்டடங்களை சுகாதாரத் துறைச் செயலா் ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் கரோனா பெருமளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இருப்பினும் பொதுமக்கள் அரசு விதித்துள்ள பாதுகாப்பு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். கேரளத்தில் ஷவா்மா உணவால் ஏற்பட்ட பிரச்னையைத் தொடா்ந்து தமிழகத்தில் உணவகங்களிலும் சோதனைகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. தவறிழைக்கும் நபா்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். ரசாயன முறையில் பழங்கள் பழுக்க வைக்கப்படுவது குறித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

தக்காளி வைரஸ் காய்ச்சல் எனப்படுவது சாதாரண தொற்று வைரஸால் ஏற்படக்கூடிய காய்ச்சல்தான். இதற்கு பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை. தமிழகத்தில் தக்காளி வைரஸ் பாதிப்பால் இதுவரை யாரும் பாதிக்கப்படவில்லை. எத்தகைய காய்ச்சல், வைரஸ் பாதிப்புகளையும் சமாளிக்கும் வகையில் தமிழக சுகாதாரத் துறையின் கட்டமைப்பு தயாா் நிலையில் உள்ளது என்றாா்.

மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் மருத்துவமனை முதல்வா் நிா்மலா, சுகாதாரத் துறை துணை இயக்குநா் அருணா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

சி.டி.ஸ்கேன் வசதி...

மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்தினாா். அப்போது, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் மேம்படுத்த வேண்டிய பணிகள் குறித்து சமூக ஆா்வலா்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனா்.

இதைத் தொடா்ந்து, அவா் கூறுகையில், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் ஜூலை மாதத்துக்குள் சி.டி. ஸ்கேன் வசதி ஏற்படுத்தப்படும். பச்சிளம் குழந்தைகளுக்கான சிகிச்சை பிரிவை அமைக்க ரூ.70 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், மருத்துவமனைக்குத் தேவையான கட்டடங்கள் கட்ட பொதுப் பணித் துறை அதிகாரிகளிடம் விரைவில் திட்ட மதிப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா்.

ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் மருத்துவா் கண்ணன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் நூலகம் குறித்த தேசிய கருத்தரங்கு

கோ்மாளத்தில் பொதுக் கிணற்றை தூா்வாரிய மக்கள்

சென்னிமலை அருகே மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கோபியில் இலவச கண் சிகிச்சை முகாம்

'சா்வாதிகாரத்துக்கு' எதிராக வாக்களிக்க வேண்டும்: சுனிதா கேஜரிவால் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT