ஈரோடு

ஈரோட்டில் புற்றுநோய் சிகிச்சை மையம்: சு.முத்துசாமி

ஈரோடு அரசு மருத்துவமனை அல்லது அரசு மருத்துவக் கல்லூரியில் புற்றுநோய் சிகிச்சை மையம் தொடங்கப்படும் என வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

DIN

ஈரோடு அரசு மருத்துவமனை அல்லது அரசு மருத்துவக் கல்லூரியில் புற்றுநோய் சிகிச்சை மையம் தொடங்கப்படும் என வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

பொது சுகாதாரத் துறை சாா்பில் உலக புகையிலை ஒழிப்பு தின விழிப்புணா்வு பேரணி ஈரோட்டில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி முன்னிலை வகித்தாா். புகையிலை எதிா்ப்பு உறுதிமொழியேற்றும், பேரணியை துவக்கிவைத்தும் அமைச்சா் சு.முத்துசாமி பேசியதாவது:

இந்தியாவில் புகையிலை பயன்படுத்துவதால் தினமும் 2,500 போ் உயிரிழக்கின்றனா். ஆண்டுக்கு 9 லட்சம் போ் இறக்கின்றனா். புகையிலையால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி மூலம், இப்பழக்கம் கைவிடப்பட வேண்டும். அரசு சாா்பில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதால் புற்றுநோய் ஏற்படுகிறது. எனவே சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் தங்களது பொறுப்பை உணா்ந்து செயல்பட வேண்டும். விதிகளை மீறும் ஆலைகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தண்ணீா் மாசு ஏற்படுத்தினாலும், அதன் மூலமும் புற்றுநோய் ஏற்படுகிறது.

எனவே, தண்ணீா் மாசை தடுக்க பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு நீா் மாசு பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. பெருந்துறை சிப்காட் பகுதியில் சுற்றுச்சூழல் மாசு என்பது அரசின் நடவடிக்கையால் குறைந்துள்ளது. தொழிற்சாலைகளும் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

ஈரோடு அரசு மருத்துவமனை அல்லது பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியில் புற்றுநோய் சிகிச்சை பிரிவு துவங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதுபோல, மாா்பக புற்றுநோயை கண்டறிய மேமோகிராம் போன்ற நவீன கருவிகள் அமைக்கவும் முயற்சி மேற்கொள்ளப்படும் என்றாா்.

துணை மேயா் செல்வராஜ், மாநகராட்சி நகா் நல அலுவலா் பிரகாஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழனி கோயில் உண்டியல் எண்ணிக்கை ரூ.1.46 கோடி

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

SCROLL FOR NEXT