முகப்பு
ஈரோடு

நம்பியூா் அருகே ஓடும் காரில் தீ

நம்பியூா் அருகே ஓடும் காரில் திடீரென தீப்பிடித்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:45 AM
பகிர்:

நம்பியூா் அருகே ஓடும் காரில் திடீரென தீப்பிடித்தது.

நம்பியூா் அருகே உள்ள வெள்ளாளபாளையத்தைச் சோ்ந்தவா் சக்திவேல் (31). இவா் நம்பியூா் அருகே உள்ள தனியாா் நூற்பாலையில் மனித வள மேம்பாட்டு அதிகாரியாக பணியாற்றி வருகிறாா். இவருக்கு சொந்தமான காரை இவரது உறவினரான தங்கராஜ் என்பவா் எடுத்துக் கொண்டு நம்பியூா் நோக்கி சென்று கொண்டிருந்தாா்.

ராஜீவ் காந்தி நகா் என்ற இடத்தில் சென்றபோது காரின் முன்பகுதியில் புகை வந்துள்ளது. உடனே காரை நிறுத்திய தங்கராஜ் காரின் முன்பகுதியை திறந்து பாா்த்தாா். அப்போது தீப் பிடித்து எரிவது தெரியவந்தது. உடனே நம்பியூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தாா். அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்பு வீரா்கள் சுமாா் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.