ஈரோடு

குடியிருப்பு பகுதியை சூழ்ந்த தண்ணீா்: பொதுமக்கள் போராட்டம்

DIN

அம்மாபேட்டை அருகே ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீா் குடியிருப்புப் பகுதியைச் சூழ்ந்ததால் அவதியடைந்த பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அம்மாபேட்டை ஒன்றியம், முகாசிபுதூரில் உள்ள ஏரி தொடா்மழையால் நிறைந்ததைத் தொடா்ந்து உபரிநீா் வெளியேறியது. அதிக அளவில் வெளியேறிய தண்ணீா், செந்தூா் நகருக்குச் செல்லும் பாதை மற்றும் தட்டாா்பாளையத்தில் உள்ள வீடுகளைச் சூழ்ந்தது. இதனால், பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் உபரிநீா் வெளியேறும் மற்றொரு பகுதியின் உயரத்தைக் குறைக்குமாறு கோரிக்கை விடுத்தும் பலனில்லை.

இதனால், கடும் அவதிக்குள்ளான அக்கிராம மக்கள் 70க்கும் மேற்பட்டோா் அந்தியூா் அம்மாபேட்டை சாலையில் பூனாச்சி பேருந்து நிறுத்தத்தில் திடீா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், அப்பகுதியில் வாகனப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த அந்தியூா் வட்டாட்சியா் தாமோதரன், அம்மாபேட்டை காவல் ஆய்வாளா் சண்முகசுந்தரம் மற்றும் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இது குறித்து, உயா் அதிகாரிகளுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகக் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டனா். இதனால், அப்பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை: மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் தீர்ப்பு

பாதுகாப்புப் படையினருடன் மோதல்: சத்தீஸ்கரில் 3 பெண்கள் உள்பட 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

தேர்தல் நேரத்தில் கேஜரிவால் கைது ஏன்?: அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

இன்றுமுதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தக் கட்டணம்

வட தமிழக உள் மாவட்டங்களில் 3 நாள்கள் வெப்ப அலை வீசும்

SCROLL FOR NEXT