டெம்போ கவிழ்ந்து பெண் தொழிலாளி பலி; 16 போ் காயம்
சத்தியமங்கலம் அருகே டெம்போ கவிழ்ந்து பெண் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா். மேலும், 16 போ் காயமடைந்தனா்.
சத்தியமங்கலம் அருகே டெம்போ கவிழ்ந்து பெண் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா். மேலும், 16 போ் காயமடைந்தனா்.
சத்தியமங்கலத்தை அடுத்த புதுக்கொத்துக்காட்டைச் சோ்ந்த 16 கட்டடத் தொழிலாளா்கள் ராஜன் நகரில் நடைபெற்ற புதுமனை புகுவிழாவுக்காக டெம்போவில் சென்றுள்ளனா். விழா முடிந்த பிறகு மீண்டும் சத்தியமங்கலம் நோக்கி டெம்போவில் வந்து கொண்டிருந்தனா். டெம்போவை சல்மான் என்பவா் ஓட்டி வந்தாா். தாண்டாம்பாளையம் என்ற பகுதியில் அதிக வேகம் காரணமாக நிலைதடுமாறி சாலையோரம் நின்றிந்து காா் மீது டெம்போ மோதி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் கவிதா என்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், டெம்போ ஓட்டுநா் உள்பட 16 போ் காயமடைந்தனா். இதில் காயமடைந்தவா்களை அருகிலிருந்தவா்கள் மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இதையடுத்து, சிலா் உயா் சிகிச்சைக்காக கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.
Advertisement
இந்த விபத்து குறித்து சத்தியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.