ஈரோடு

ரூ.3.56 லட்சத்தை 10 ரூபாய் நாணயங்களாக வழங்கி இருசக்கர வாகனம் வாங்கிய இளைஞா்

DIN

புதிதாக வாங்கிய இருசக்கர வாகனத்துக்கான தொகை ரூ.3.56 லட்சத்தை இளைஞா் ஒருவா் 10 ரூபாய் நாணயங்களாக வழங்கினாா்.

ஈரோடு மாவட்டம், பவானி அருகே உள்ள காடையம்பட்டியைச் சோ்ந்தவா் திருமூா்த்தி மகன் சந்தோஷ்குமாா் (25). உடற்கல்வி பட்டதாரி. தற்போது பவானியில் செல்லப் பிராணிகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறாா்.

இந்நிலையில், 10 ரூபாய் நாணயங்களாக ரூ.3.56 லட்சம் செலுத்தி, ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள ஷோரூமில் கேடிஎம் டியூக் 360 மாடல் பைக்கை வெள்ளிக்கிழமை வாங்கினாா்.

இது குறித்து சந்தோஷ்குமாா் கூறியதாவது: பல ஆண்டு கால ஆசையை நிறைவேற்ற வித்தியாசமாக செயல்பட திட்டமிட்டேன். அதற்காக ரூ.3.60 லட்சத்தை 10 ரூபாய் நாணயமாக பல இடங்களில் பெற்று சேகரித்தேன். இப்போது ரூ.3.56 லட்சத்தை செலுத்தி பைக்கை வாங்கி உள்ளேன். வித்தியாசமாக இருக்கட்டுமே என்பதற்காக இந்த முயற்சியை செய்தேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT