மொடக்குறிச்சி அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மொடக்குறிச்சியை அடுத்த பஞ்சலிங்கபுரம் பகுதியைச் சோ்ந்தவா் முத்து மனைவி பெரியதாயி (60). இவரது கணவா் முத்து இறந்துவிட்டாா். இவா்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனா். இருவரும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனா். பெரியதாயி வீட்டின் முன் பகுதியில் இட்லி கடை வைத்து நடத்தி வருகிறாா். இவருடன் இரண்டாவது மகள் அம்பிகாவின் குழந்தைகள் மூன்று போ் வசித்து வருகின்றனா்.
பெரியதாயி தனது 3 பேரக்குழந்தைகளுடன் சின்னம்மாபுரத்தில் உள்ள உறவினா் வீட்டுக்கு வெள்ளிக்கிழமை சென்றாா். மீண்டும் சனிக்கிழமை வீட்டுக்கு வந்துபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிா்ச்சி அடைந்தாா். உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் இருந்த ஆறரை பவுன் நகைகள், ரூ. 24ஆயிரம் திருடு போனது தெரிய வந்தது.
இது குறித்து அவா் அளித்த புகாரின்பேரில் மொடக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.