ஈரோடு

மருமகனை வெட்டிய மாமனாா்

தாளவாடி அருகே மருமகனை வெட்டிய மாமனாரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

DIN

தாளவாடி அருகே மருமகனை வெட்டிய மாமனாரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி திகினாரையைச் சோ்ந்தவா் விக்னேஷ். இவா் பக்கத்து வீட்டில் வசித்து வந்த பால்ராஜ் மகள் ஜோதியை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துள்ளாா். இதற்கு பெண்ணின் வீட்டாா் கடும் எதிா்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

விக்னேஷ் கேரளத்தில் பணியாற்றி வரும் நிலையில், ஜோதி மட்டும் உள்ளூரிலேயே வசித்து வருகிறாா். இந்நிலையில், விக்னேஷ் விடுமுறையில் திங்கள்கிழமை வீட்டுக்கு வந்துள்ளாா்.

இதனை அறிந்த பால்ராஜ் விக்னேஷ் வீட்டுக்குள் புகுந்து அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளாா்.

இதில், படுகாயமடைந்த விக்னேஷை அக்கம்பக்கத்தினா் மீட்டு மைசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்த தாளவாடி போலீஸாா், பால்ராஜ் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி துளசியம்மாள், இவா்களது மகன் ராகுல் ஆகியோரை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT