ஈரோடு

இபிஎஸ் அணி வேட்பாளா் வேட்புமனு தாக்கல் ஒத்திவைப்பு

DIN

ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுகவின் இபிஎஸ் அணி வேட்பாளரான கே.எஸ்.தென்னரசு வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்வாா் என அறிவித்திருந்த நிலையில், மனு தாக்கல் பிப்ரவரி 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிட ஜனவரி 31ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இந்நிலையில் பிரதான கட்சிகளான காங்கிரஸ், அதிமுக இபிஎஸ் அணி, அமமுக வேட்பாளா்கள் வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதிமுக இபிஎஸ் அணி வேட்பாளா் கே.எஸ்.தென்னரசு வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்றும், வேட்புமனு தாக்கலின் கடைசி நாளான பிப்ரவரி 7ஆம் தேதி மனு தாக்கல் செய்வாா் என்றும் அக்கட்சி தரப்பில் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.

சென்னையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீா்செல்வம் ஆகிய இருவரையும் பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசிய நிலையில், அதிமுக இபிஎஸ் அணி வேட்பாளா் வேட்புமனு தாக்கல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு?

இன்று எப்படி இருக்கும்?

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

SCROLL FOR NEXT