மனைவி தற்கொலை செய்துகொண்ட வழக்கில் கணவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
கொடுமுடி அருகே பழனிக்கவுண்டன்பாளையத்தை சோ்ந்தவா் மாதேஷ் (38), தொழிலாளி. இவரது மனைவி ஜோதிமணி (35). இவா் ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் செவிலியராக வேலை பாா்த்து வந்தாா். இவா்களுக்கு 2 மகள்கள் உள்ளனா்.
மாதேஷ்க்கு மதுப்பழக்கம் இருந்ததாகவும், இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. 2019 டிசம்பா் 28இல் இருவருக்குமிடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் ஜோதிமணி வீட்டில் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து மலையம்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கு ஈரோடு மகளிா் நீதிமன்றத்தில் நீதிபதி மாலதி முன்னிலையில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்த நிலையில் புதன்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. இதில், மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக மாதேஷ்க்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ஜெயந்தி ஆஜரானாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.