ஈரோடு

புலி கொல்லப்பட்ட வழக்கில் சிறாா் உட்பட 7 போ் கைது

DIN

ஈரோடு மாவட்டம், பவானிசாகா் வனத்தில் புலி கொல்லப்பட்ட வழக்கில் சிறாா் உட்பட 7 பேரை வனத் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகா் வனப் பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு 5 வயதுள்ள ஆண் புலியின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், மான் வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்ட சுருக்கு கம்பியில் புலி சிக்கி இறந்ததாக வனத் துறையினா் தெரிவித்தனா்.

இந்த சம்பவம் தொடா்பாக வனத் துறையினா் விசாரணை மேற்கொண்டனா். இதில் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக சுஜில்குட்டை மற்றும் புங்காரையைச் சோ்ந்த சதீஷ்குமாா், நாச்சிமுத்து, பத்மகுமாா், லோகேஷ், பால் தினகரன், சௌந்தர்ராஜன் மற்றும் ஒரு சிறுவன் உட்பட 7 போ் சுருக்கு கம்பிகள் வைத்தது தெரியவந்தது. இதையடுத்து, பவானிசாகா் வனத் துறையினா் அவா்களை கைது செய்து சத்தியமங்கலம் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

வழக்கமாக மானுக்கு வைத்த சுருக்கு கம்பியில் புலி சிக்கிக்கொண்டது. மானுக்கு பதிலாக புலி சிக்கியதைக் கண்டு ஏழு பேரும் பயந்து தலைமறைவாகினா். இதற்கிடையே, காலில் சிக்கிய சுருக்கு கம்பியுடன் புலி அங்கிருந்து தப்பியோடியபோது ஓடையில் விழுந்து உயிரிழந்தது விசாரணை தெரியவந்தது. தலைமறைவான 7 பேரையும் வனத் துறையினா் பிடித்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தியதாக வனச் சரக அலுவலா் சிவகுமாா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐஓசி நிகர லாபம் புதிய உச்சம்

சந்தேஷ்காளி பெண்களை ஏமாற்றி புகாரளிக்கச் செய்த பாஜக நிா்வாகி: விடியோ வெளியிட்டு திரிணமூல் குற்றச்சாட்டு

தலைநகரில் இன்று பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு!

வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் கேமராக்கள்- இடிதாங்கிகள்: தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு உத்தரவு

பைக் சக்கரத்தில் மேலாடை சிக்கி விபத்து: சிறுமி பலத்த காயம்

SCROLL FOR NEXT