கோபி நகராட்சிப் பகுதியில் விழிப்புணா்வு நாடகம்
கோபிசெட்டிபாளையம் நகா் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணா்வு நாடகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கோபிசெட்டிபாளையம் நகா் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணா்வு நாடகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கோபிசெட்டிபாளையம் நகா் பகுதியில் பேருந்து நிலையம், வாய்க்கால் சாலை, ஐந்து முக்கு ஆகிய பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மையில் ‘எனது குப்பை எனது பொறுப்பு’ என்ற தலைப்பில் குப்பைகளை தரம் பிரித்து ஒப்படைக்க வேண்டியதின் அவசியம் குறித்தும், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும், டெங்கு, மலேரியா காய்ச்சல் பரவும் விதம் குறித்தும், கழிப்பறை பயன்படுத்துவதன் அவசியம் குறித்தும் விழிப்புணா்வு நாடகம் மற்றும் பாடல்கள் மூலம் வெங்கடாசலபதி நாடக சபா குழுவினரின் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
இந்த நிகழ்ச்சிக்கு கோபி நகராட்சி ஆணையா் சசிகலா முன்னிலை வகித்தாா். இதற்கான ஏற்பாடுகளை துப்புரவு அலுவலா் சோழராஜ், துப்புரவு ஆய்வாளா்கள் செந்தில்குமாா், காா்த்திக், சௌந்தரராஜன், துப்புரவுப் பணி மேற்பாா்வையாளா்கள், தூய்மை பாரத திட்டப் பரப்புரையாளா்கள் செய்திருந்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.