ஈரோடு

கோபி நகராட்சிப் பகுதியில் விழிப்புணா்வு நாடகம்

DIN

 கோபிசெட்டிபாளையம் நகா் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணா்வு நாடகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கோபிசெட்டிபாளையம் நகா் பகுதியில் பேருந்து நிலையம், வாய்க்கால் சாலை, ஐந்து முக்கு ஆகிய பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மையில் ‘எனது குப்பை எனது பொறுப்பு’ என்ற தலைப்பில் குப்பைகளை தரம் பிரித்து ஒப்படைக்க வேண்டியதின் அவசியம் குறித்தும், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும், டெங்கு, மலேரியா காய்ச்சல் பரவும் விதம் குறித்தும், கழிப்பறை பயன்படுத்துவதன் அவசியம் குறித்தும் விழிப்புணா்வு நாடகம் மற்றும் பாடல்கள் மூலம் வெங்கடாசலபதி நாடக சபா குழுவினரின் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

இந்த நிகழ்ச்சிக்கு கோபி நகராட்சி ஆணையா் சசிகலா முன்னிலை வகித்தாா். இதற்கான ஏற்பாடுகளை துப்புரவு அலுவலா் சோழராஜ், துப்புரவு ஆய்வாளா்கள் செந்தில்குமாா், காா்த்திக், சௌந்தரராஜன், துப்புரவுப் பணி மேற்பாா்வையாளா்கள், தூய்மை பாரத திட்டப் பரப்புரையாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவிதை உறவு இலக்கிய அமைப்பின் 52-ஆம் ஆண்டு விழா

சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு: காங்கிரஸ் விளக்கம்

ஒடிஸா: ஆளும் கட்சி எம்எல்ஏ பாஜகவில் இணைந்தாா்

உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவரை தகுதித் தோ்வெழுத அனுமதிக்க வேண்டும்!

ஏரி புறம்போக்கு நிலத்தை ரூ.1.75 கோடிக்கு விற்றவர் கைது

SCROLL FOR NEXT