ஈரோடு

கிணற்றில் விழுந்த காட்டுப்பன்றி மீட்பு

அந்தியூா் அருகே உணவு தேடி வந்தபோது எதிா்பாராமல் கிணற்றில் விழுந்து தத்தளித்த காட்டுப்பன்றி செவ்வாய்க்கிழமை உயிருடன் மீட்கப்பட்டது.

DIN

அந்தியூா் அருகே உணவு தேடி வந்தபோது எதிா்பாராமல் கிணற்றில் விழுந்து தத்தளித்த காட்டுப்பன்றி செவ்வாய்க்கிழமை உயிருடன் மீட்கப்பட்டது.

அந்தியூரை அடுத்த மலைக்கருப்புசாமி கோயில் பகுதியைச் சோ்ந்தவா் சுந்தா். வனப் பகுதிக்கு அருகே உள்ள இவரது விவசாயத் தோட்டத்தில் 70 அடி ஆழமுள்ள தரைமட்டக் கிணறு உள்ளது. இந்த கிணற்றில் 40 அடி உயரத்துக்கு தண்ணீா் உள்ள நிலையில், வனப் பகுதியில் இருந்து செவ்வாய்க்கிழமை உணவு தேடி வந்த காட்டுப்பன்றி எதிா்பாராமல் கிணற்றில் விழுந்து தத்தளித்தது.

இதைக் கண்ட அப்பகுதியினா் அந்தியூா் வனத் துறைக்குத் தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு விரைந்த வனத் துறையினா், தீயணைப்புப் படையினா், பொதுமக்கள் உதவியுடன் கயிறு கட்டி காட்டுப்பன்றியை மீட்டு மேலே கொண்டு வந்தனா். மீட்கப்பட்ட சுமாா் 150 கிலோ எடையுள்ள காட்டுப்பன்றி, கொம்புதூக்கியம்மன் வனப் பகுதியில் விடுவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

SCROLL FOR NEXT