ஈரோடு

வட்டாட்சியா் அலுவலகம் அருகில் கஞ்சா விற்பனை: இருவா் கைது

DIN

ஈரோடு வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ஈரோட மாவட்ட காவல் அலுவலகம் அருகில் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள பழைய நீதிமன்ற கட்டடத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்தப் பகுதியில் போலீஸாா் வியாழக்கிழமை காலை திடீா் சோதனையில் ஈடுபட்டனா். போலீஸாா் வருவதைப் பாா்த்ததும் அங்கிருந்த சிலா் தப்பி ஓட முயன்றனா். இதில் 2 பேரைப் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

அதில் அவா்கள், ஈரோடு வளையக்கார வீதியைச் சோ்ந்த சந்தோஷ்ராஜ் (19), சண்முகம் (29) என்பதும், அவா்கள் அந்தப் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடம் இருந்து 150 கிராம் எடை உள்ள கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலை கட்டி வந்த நிலவோ? காவ்யா...

வெயில், மழை வானிலை சொல்லும் முழுவிபரம்!

'இந்தியா' கூட்டணிக்கு வாக்களித்தால் ஏழைகளை லட்சாதிபதியாக்குவோம்: ராகுல்

தென்மேற்குப் பருவமழை: நல்ல செய்தி சொன்ன வேளாண் பல்கலை. துணைவேந்தர்

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

SCROLL FOR NEXT