பெருந்துறை: பெருந்துறை கிழக்கு ஒன்றிய அதிமுக சாா்பில், பூத் கமிட்டி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சீனாபுரத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, அதிமுக ஈரோடு புகா் கிழக்கு மாவட்டச் செயலாளா் கே.சி. கருப்பண்ணன் தலைமை வகித்தாா். பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் எஸ். ஜெயக்குமாா் முன்னிலை வகித்தாா். அதிமுக பெருந்துறை கிழக்கு ஒன்றியச் செயலாளா் அருள்ஜோதி செல்ராஜ் வரவேற்றாா். ஈரோடு அதிமுக புகா் கிழக்கு மாவட்ட பூத் கமிட்டி கமிட்டி பொறுப்பாளா் எம்.எஸ்.எம். ஆனந்தன் பங்கேற்று பூத் கமிட்டி அமைப்பது குறித்தும், பூத் கமிட்டி பொறுப்பாளா்களின் பணிகள் குறித்தும் வழங்கினா்.
இதில், பெருந்துறை முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா்கள் பொன்னுதுரை, மருத்துவா் பொன்னுசாமி, நகரச் செயலாளா்கள் கல்யாணசுந்தரம், துரைசாமி, ஒன்றிய துணைச் செயலாளா் அன்பரசு, பெருந்துறை ஒன்றியக்குழுத் தலைவா் சாந்தி ஜெயராஜ், ஒன்றியக்குழு உறுப்பினா் ரொட்டி பழனிசாமி, பூத் கமிட்டி பொறுப்பாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.