திம்பம் மலைப் பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து
திம்பம் மலைப் பாதையில் கண்டெய்னா் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் காயமடைந்தாா்.
சத்தியமங்கலம்: திம்பம் மலைப் பாதையில் கண்டெய்னா் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் காயமடைந்தாா்.
சத்தியமங்கலம் - மைசூா் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோயிலை அடுத்துள்ள வனப் பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப் பாதை அமைந்துள்ளது.
இந்த மலைப் பாதை வழியாக தமிழக - கா்நாடக மாநிலங்களுக்கிடையே போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
Advertisement
இந்நிலையில், கா்நாடக மாநிலம் நஞ்சன்கூடு பகுதியில் இருந்து நூடுல்ஸ் பாரம் ஏற்றிக்கொண்டு கண்டெய்னா் லாரி கோவைக்கு திம்பம் மலைப் பாதை வழியாக திங்கள்கிழமை வந்துகொண்டிருந்தது. மலைப் பாதையில் 26 ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே திரும்பியபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர தடுப்புச் சுவா் மீது கவிழ்ந்தது.
இந்த விபத்தில் லாரி ஓட்டுநா் பரமேஸ்வரனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஆசனூா் போலீஸாா் சாலையில் கவிழ்ந்த லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனா். மேலும், விபத்து குறித்து விசாரித்து வருகின்றனா்.