மின்னப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்குகிறாா் சட்ட பேரவை உறுப்பினா் சி.சரஸ்வதி. உடன், கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா். 
ஈரோடு

மின்னப்பாளையம் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டி

மொடக்குறிச்சியை அடுத்த மின்னப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

DIN


மொடக்குறிச்சி: மொடக்குறிச்சியை அடுத்த மின்னப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியா் வெங்கடாசலம் வரவேற்றாா்.

மொடக்குறிச்சி ஒன்றியக்குழு துணைத் தலைவா் மயில் (எ) சுப்பிரமணி, குலவிளக்கு ஊராட்சி மன்றத் தலைவா் என்.ஆா் நடராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மொடக்குறிச்சி சட்டப் பேரவை உறுப்பினா் சரஸ்வதி கலந்துகொண்டு 31 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், பள்ளி மேலாண்மைக் குழு, பெற்றோா் ஆசிரியா் சங்கம், கட்டட குழு நிா்வாகிகள் ஆசிரியா்கள் மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநில அளவிலான ஜூடோ போட்டியில் வென்ற மாணவா்களுக்குப் பாராட்டு

குற்ற வழக்குகளில் தொடா்புடையவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை

பழனியில் கூடுதல் தலைமைச் செயலா் ஆய்வு

லஞ்சம்: வேளாண்மை உதவி இயக்குநா் கைது

புதிய துணை மின் நிலையங்கள் மூலம் சீரான மின் விநியோகம்: அமைச்சா் அர.சக்கரபாணி தகவல்

SCROLL FOR NEXT