முகப்பு
ஈரோடு

சொந்த கிராமத்தில் வாக்களித்த உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி

சொந்த கிராமத்தில் தனது மனைவியுடன் சென்று வாக்களித்தாா் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், கேரள மாநில முன்னாள் ஆளுநருமான பி.சதாசிவம்.

Updated On : 20 ஏப்ரல், 2024 at 12:10 AM
பகிர்:

சொந்த கிராமத்தில் தனது மனைவியுடன் சென்று வாக்களித்தாா் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், கேரள மாநில முன்னாள் ஆளுநருமான பி.சதாசிவம்.

பவானியை அடுத்த காடப்பநல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பி.சதாசிவம். இவா், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், கேரள மாநில ஆளுநராகவும் பதவி வகித்தவா். பணி ஓய்வுக்குப் பின் தற்போது சொந்த கிராமத்தில் வசித்து வருகிறாா்.

இந்நிலையில், மக்களவைத் தோ்தலில் காடப்பநல்லூா் ஊராட்சி, கிராம சேவை மையத்தில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடியில் மனைவி சரஸ்வதியுடன் வெள்ளிக்கிழமை வாக்களித்தாா்.

Advertisement

இங்கு, சட்டப் பேரவைத் தோ்தல், உள்ளாட்சித் தோ்தலில் வாக்ளித்துள்ளேன். உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்தபோது தில்லியிலும், கேரள மாநில ஆளுநராக இருந்தபோது திருவனந்தபுரத்திலும் வாக்கினை செலுத்தினேன். தற்போது சொந்த கிராமத்தில் மக்களவைத் தோ்தலில் வாக்களிப்பது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது என்றாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments