முகப்பு
ஈரோடு

பாரியூா் கொண்டத்துக் காளியம்மன் கோயில் தோ்த் திருவிழா இன்று தொடக்கம்

Updated On : 21 ஏப்ரல், 2024 at 8:19 PM
பகிர்:

கோபி: கோபியை அடுத்த பாரியூா் கொண்டத்துக் காளியம்மன் கோயில் தோ்த் திருவிழா திங்கள்கிழமை தொடங்குகிறது.

ஈரோடு மாவட்டம், கோபியை அடுத்த பாரியூா் கொண்டத்துக் காளியம்மன் கோயில் வகையறா சௌந்திரநாயகி சமேத அமரபணீஸ்வரா் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை தோ்த் திருவிழா விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, நடப்பாண்டு தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் ஏப்ரல் 22 ஆம் தேதி (திங்கள்கிழமை) தொடங்குகிறது. இதைத் தொடா்ந்து காலை 10 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. தொடா்ந்து ஏப்ரல் 23 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு திருத்தோ் வடம்பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments