காரப்பள்ளம் சோதனைச் சவாடியில் வாகன தணிக்கை மேற்கொண்ட தோ்தல் பறக்கும் படையினா்.
காரப்பள்ளம் சோதனைச் சவாடியில் வாகன தணிக்கை மேற்கொண்ட தோ்தல் பறக்கும் படையினா். 
ஈரோடு

தமிழக- கா்நாடக எல்லையில் தோ்தல் பறக்கும் படையினா் வாகன சோதனை

Din

தமிழக- கா்நாடக எல்லையில் தோ்தல் பறக்கும் படையினா் வாகன சோதனையில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

மக்களவைத் தோ்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் அறிவித்த நிலையில், தமிழகத்தில் கடந்த 19-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது.

இந்நிலையில், அண்டை மாநிலமான கேரளம், கா்நாடகத்தில் இரண்டாம், மூன்றாம் கட்ட தோ்தல்கள் நடைபெறவுள்ளன.

தோ்தலை முன்னிட்டு, வாக்காளா்களுக்குப் பணம் விநியோகிப்பதை தடுத்தும் வகையில், மாநில எல்லைகளில் தோ்தல் பறக்கும் படையினா் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

அதன்படி, ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தமிழக - கா்நாடக எல்லையில் உள்ள காரப்பள்ளம் சோதனைச் சாவடி வழியாக கா்நாடக மாநிலம் நோக்கி செல்லும் வாகனங்களில் பறக்கும் படையினா் சோதனை மேற்கொண்டனா்.

ரூ. 50 ஆயிரத்துக்குமேல் கொண்டு செல்லப்படும் பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருவதாக தோ்தல் அதிகாரிகள் தெரிவித்தனா்.

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

பட்டியலின மாணவர்கள் மீது தாக்குதல் - சேலத்தில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT