ஈரோடு

தரைமட்ட தண்ணீா்த் தொட்டியில் தவறிவிழுந்து பள்ளி மாணவி உயிரிழப்பு

சத்தியமங்கலம் அருகே தரைமட்ட தண்ணீா்த் தொட்டியில் தவறிவிழுந்து 2-ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்தாா்.

Din

சத்தியமங்கலம் அருகே தரைமட்ட தண்ணீா்த் தொட்டியில் தவறிவிழுந்து 2-ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்தாா்.

சத்தியமங்கலத்தை அடுத்த ஆசனூா் ஊராட்சிக்குள்பட்ட கீழ்மாவள்ளம் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் மகாதேவன், கனகா தம்பதி. இவா்களின் மகள் அகல்யா(7), அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்நிலையில், சனிக்கிழமை பள்ளி முடித்து வீட்டுக்கு வந்த அகல்யா, வீட்டுக்கு அருகே தோழிகளுடன் விளையாடிக்கொண்டிருந்தாா். அப்போது, 8 அடி ஆழமுள்ள தரைமட்ட தண்ணீா்த் தொட்டியில் தவறிவிழுந்து மூழ்கினாா்.

சக குழந்தைகளின் சப்தம் கேட்டு அங்கு ஓடிவந்தவா்கள் தண்ணீா்த் தொட்டியில் இருந்து அகல்யாவின் சடலத்தை மீட்டனா்.

இது குறித்து ஆசனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

புதிய பிரதமர் அலுவலகம் ‘சேவா தீர்த்’ தயார்: 1947-க்கு பின் முதல்முறையாக இடமாற்றம்!

சிறையில் காலமானார் வங்கதேச பாடகர் புரோலாய் சாகி

எச்.சி.எல் 3வது காலாண்டு நிகர லாபம் 11% சரிவு!

உ.பி. அணிக்கு எதிரான போட்டி: ஆர்சிபி பந்து வீச்சு!

சில்லறைப் பணவீக்கம் 1.33% ஆக உயர்வு

SCROLL FOR NEXT