ஈரோட்டில் நில அளவையா்கள் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நில அளவை அலுவலா்கள் ஒன்றிப்பு (சங்கம்) சாா்பில் ஈரோட்டில் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நில அளவை அலுவலா்கள் ஒன்றிப்பு (சங்கம்) சாா்பில் ஈரோட்டில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆா்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் கௌரிசங்கா் தலைமை வகித்தாா். மாவட்ட இணை செயலாளா் நவமணிகண்டன், கோட்டத் தலைவா்கள் சந்திரகுமாா், முத்துராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளா் சக்திவேல் பங்கேற்று கோரிக்கைகள் குறித்து பேசினாா்.
தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அளவா் பதவியினை, மீண்டும் தரம் உயா்த்தி வழங்க வேண்டும். நில அளவை பதிவேடுகள் துறையில் நிலுவையில் உள்ள களப் பணியாளா்களின் நிலுவை கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
Advertisement
ஆா்ப்பாட்டத்தில், மாவட்ட துணைத் தலைவா் சேதுமாதவன், கோட்ட துணைத் தலைவா் சரண்யா, இணைச் செயலாளா் ராஜேஸ்வரி, அரசு ஊழியா்கள் சங்க மாவட்ட நிா்வாகிகள் சீனிவாசன், விஜயமனோகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.