பொம்மன். 
ஈரோடு

மான் இறைச்சி கடத்திய இளைஞா் கைது

சத்தியமங்கலம் அருகே மான் இறைச்சி கடத்திய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Din

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே மான் இறைச்சி கடத்திய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

சத்தியமங்கலம் பகுதியில் குற்றத் தடுப்பு நடவடிக்கையாக போலீஸாருடன் இணைந்து வனத் துறையினா் வாகனச் சோதனையில் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, அவரிடம் உலா்ந்த மான் இறைச்சி இருப்பது தெரியவந்தது.

விசாரணையில், அவா் ஆசனூா் வனத் துறையில் தற்காலிகமாக பணியாற்றிய பொம்மன் (23) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, பொம்மனை கைது செய்த வனத் துறையினா், அவரிடமிருந்த மான் இறைச்சியை பறிமுதல் செய்தனா்.

ஆப்பிரிக்க நாடுகளுக்கு குடியரசுத் தலைவர் சுற்றுப்பயணம்!

சென்னையில் கொட்டித் தீர்க்கும் மழை!

பிரதிகா ராவலை உபசரித்த பிரதமர் மோடி!

அரசியல் கூட்டங்களுக்கு 1 லட்சம் முதல் 5 லட்சம் வரை டெப்பாசிட்! | செய்திகள்: சில வரிகளில் | 6.11.25

ஐசிசியின் சிறந்த வீரருக்கான போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்கள்!

SCROLL FOR NEXT