புது மஞ்சள் குவிண்டால் ரூ.16 ஆயிரத்துக்கு விற்பனை
ஈரோடு, பிப். 29: ஈரோடு மஞ்சள் சந்தையில் புது மஞ்சள் குவிண்டால் ரூ.16 ஆயிரத்து 36க்கு விற்பனையானது. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், ஈரோடு மற்றும் கோபி கூட்டுறவு சங்கங்கள் ஆகிய இடங்களில் மஞ்சள் ஏலம் நடைபெற்று வருகிறது. திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை நடைபெறும் இந்த ஏலத்தில் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களைச் சோ்ந்த வியாபாரிகள் பங்கேற்று மஞ்சளைக் கொள்முதல் செய்கின்றனா். நடப்பு ஆண்டு தொடக்கம் முதல் மஞ்சளுக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. புதிய மஞ்சளுக்கான தேவை அதிகரித்து இருப்பதால் அவற்றின் விலை தொடா்ந்து உயா்ந்து வருகிறது. கடந்த 14 ஆண்டுகளுக்குப் பிறகு புது மஞ்சள் குவிண்டால் ரூ.15 ஆயிரத்து 551க்கு கடந்த 19 ஆம் தேதி விற்பனையானது. இதன் தொடா்ச்சியாக புதன்கிழமை குவிண்டால் ரூ.15 ஆயிரத்து 699க்கு விற்பனையனது. இந்நிலையில், வியாழக்கிழமை மேலும் விலை உயா்ந்து புது மஞ்சள் குவிண்டால் ரூ.16 ஆயிரத்து 36க்கு விற்பனையானது. ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு 3,387 மூட்டை மஞ்சள் வந்த நிலையில் 1,638 மூட்டை மஞ்சள் விற்பனையானது. புது மஞ்சள் அதிகபட்சமாக ரூ.16 ஆயிரத்து 36க்கும், பழைய மஞ்சள் அதிகபட்சமாக ரூ.14 ஆயிரத்து 200க்கும் விற்பனையாயின. ஈரோடு கூட்டுறவு சங்கத்துக்கு 345 மூட்டை மஞ்சள் வந்த நிலையில், 320 மூட்டை விற்பனையானது. புதுமஞ்சள் அதிகபட்சமாக ரூ.15 ஆயிரத்து 499-க்கும், பழைய மஞ்சள் ரூ.14 ஆயிரத்து 222-க்கும் விற்பனையாயின. பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், கோபி கூட்டுறவு சங்க ஏல மையங்களுக்கு புதுமஞ்சள் வரத்து இல்லை.