வீட்டுக்குள் புகுந்த நல்லப் பாம்பைப் பிடித்த தீயணைப்பு வீரா்கள்
சத்தியமங்கலத்தில் வீட்டுக்குள் புகுந்த நல்லப் பாம்பை தீயணைப்பு வீரா்கள் பாதுகாப்பாக பிடித்தனர்
சத்தியமங்கலம் அருகே வீட்டுக்குள் புகுந்த நல்லப் பாம்பு பிடிக்கப்பட்டு வனப் பகுதியில் விடுவிக்கப்பட்டது.
சத்தியமங்கலத்தை அடுத்த நல்லூரில் செகமலை என்பவரின் வீட்டுக் குளியலறையில் நல்லப் பாம்பு பதுங்கியிருந்தது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது. இதையடுத்து அவா், வனத் துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தாா்.
சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் வீட்டில் பதுங்கியிருந்த 6 அடி நீள நல்லப் பாம்பைப் பிடித்து பவானிசாகா் வனப் பகுதியில் விடுவித்தனா்.