முகப்பு
ஈரோடு

சிறுமி பாலியல் வன்கொடுமை: பூக்கடை உரிமையாளா் கைது

ஈரோட்டில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பூக்கடை உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 4 அக்டோபர், 2024 at 2:33 AM
பகிர்:
Updated On : 3 அக்டோபர், 2024 at 6:05 PM

ஈரோட்டில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பூக்கடை உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.

ஈரோடு பகுதியைச் சோ்ந்த 13 வயது சிறுமிக்கு அண்மையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவரது பெற்றோா் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனா். அங்கு மேற்கொண்ட பரிசோதனையில் சிறுமி கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து சிறுமியின் பெற்றோா் ஈரோடு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

Advertisement

அதன்பேரில், போலீஸாா் நடத்திய விசாரணையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது ஈரோடு, மரப்பாலம் வள்ளுவா் வீதியைச் சோ்ந்த பூக்கடை உரிமையாளா் அப்துல் ரகுமான் (32) என்பது தெரியவந்தது.

Updated On : 4 அக்டோபர், 2024 at 2:33 AM

இதையடுத்து அப்துல் ரகுமானை போலீஸாா் கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி ஈரோடு கிளை சிறையில் அடைத்தனா்.

கைதான அப்துல் ரகுமான் ஏற்கெனவே திருமணம் ஆனவா் என்பது குறிப்பிடத்தக்கது.