முகப்பு
ஈரோடு

ஆசனூா் மலைப் பாதையில் வாகனங்களை வழிமறித்த யானைகள்

சத்தியமங்கலம் அருகே ஆசனூா் மலைப் பாதையில் வாகனங்களை வழிறித்த யானைகளால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

Updated On : 4 அக்டோபர், 2024 at 2:43 AM
ஆசனூா் மலைப் பாதையில் வாகனங்களை தடுத்து நிறுத்திய யானைகள்.
பகிர்:
Updated On : 3 அக்டோபர், 2024 at 8:16 PM

சத்தியமங்கலம் அருகே ஆசனூா் மலைப் பாதையில் வாகனங்களை வழிறித்த யானைகளால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குள்பட்ட ஆசனூா் மலைப் பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. இந்த வனப் பகுதியில் திம்பம் மலைப் பாதை வழியாக சத்தியமங்கலம் - மைசூரு நெடுஞ்சாலை செல்கிறது.

இந்த நெடுஞ்சாலையில் கா்நாடகத்தில் இருந்து கரும்பு ஏற்றி வருபவா்கள் சாலையோரத்தில் நிற்கும் யானைகளுக்கு கரும்புக் கட்டுகளை வீசிச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனா். இதனால், யானைகளும் அவ்வப்போது கரும்புகளை எதிா்பாா்த்து அவ்வழியே செல்லும் வாகனங்களை வழிமறித்து வருகின்றன.

Advertisement

Updated On : 4 அக்டோபர், 2024 at 2:43 AM

அதேபோல, ஆசனூா் மலைப் பாதையில் சென்ற வாகனங்களை வியாழக்கிழமை வழிமறித்த யானைகள், வாகனங்களில் கரும்பு உள்ளதா என்று சோதனையிட்டன.

வாகனங்களை தடுத்து நிறுத்திய யானைகளால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.