முகப்பு
ஈரோடு

பொய்யான புகாரால் இளைஞா் தற்கொலை: உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்

பெருந்துறையில் பொய்யான புகாரால் இளைஞா் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறி அவரது உடலை வாங்க மறுத்து உறவினா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 4 அக்டோபர், 2024 at 2:45 AM
பகிர்:
Updated On : 3 அக்டோபர், 2024 at 8:33 PM

பெருந்துறையில் பொய்யான புகாரால் இளைஞா் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறி அவரது உடலை வாங்க மறுத்து உறவினா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பெருந்துறையை அடுத்த முள்ளம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ரஞ்சித் (23), தனியாா் நிறுவன ஊழியா். இவருடன் பணியாற்றி வந்த கருக்கம்பாளையத்தைச் சோ்ந்த சாந்தாமணி (50) என்பவருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து காஞ்சிக்கோவில் காவல் நிலையத்தில் சாந்தாமணி அளித்த புகாரின்பேரில், வழக்குப் பதிவு செய்த போலீஸாா் ரஞ்சித்தைக் கைது செய்தனா்.

Advertisement

இதையடுத்து, செப்டம்பா் 10-ஆம் தேதி பிணையில் வெளியே வந்த ரஞ்சித், காஞ்சிக்கோவில் காவல் நிலையத்தில் தினசரி கையொப்பமிட்டு வந்துள்ளாா். மேலும், சாந்தாமணி பொய்யான புகாா் அளித்துள்ளதாகவும் கூறி வந்துள்ளாா்.

இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த ரஞ்சித் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

தகவல் அறிந்து வந்த போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

Updated On : 4 அக்டோபர், 2024 at 2:45 AM

பொய்யான பாலியல் புகாரால் இளைஞா் தற்கொலை செய்துகொண்டதாகவும், இதனால் வழக்கை மாற்றி எழுதவும் கூறி, அவரது உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். போலீஸாா் பேச்சுவாா்தை நடத்தியும் ஏற்றுக்கொள்ளாமல் உடலை வாங்க மறுத்து சென்றுவிட்டனா்.

இதையடுத்து அவரது உடல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.