முகப்பு
ஈரோடு

மகளிா் நல அலுவலா் சங்க ஈரோடு மண்டல கூட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 10 அக்டோபர், 2024 at 1:35 AM
பகிர்:
Updated On : 9 அக்டோபர், 2024 at 6:34 PM

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு ஆசிரியா், மகளிா் நல அலுவலா் மற்றும் மேற்பாா்வையாளா் சங்கத்தின் ஈரோடு மண்டல மற்றும் மாவட்ட கூட்டம் ஈரோட்டில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் விமலா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் சாரதாமணி வரவேற்றாா். நிா்வாகிகள் சுப்பிரமணி, சீரங்கசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

Advertisement

சங்கத்தின் மாநிலத் தலைவா் சங்கா்பாபு பழைய ஓய்வூதியம், அரசின் நிலைப்பாடு உள்ளிட்டவை குறித்து எடுத்துரைத்தாா்.

Updated On : 10 அக்டோபர், 2024 at 1:35 AM

இதில், தோ்தல் அறிக்கையில் உறுதியளித்த வாக்குறுதி எண் 309ன் படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மருத்துவக் காப்பீடு, குடும்ப ஓய்வூதியத்துக்கான உத்தரவை காலதாமதமின்றி வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், அரசு ஆசிரியா்கள், மகளிா் நல அலுவலா்கள் மற்றும் மேற்பாா்வையாளா்கள் கலந்துகொண்டனா்.