முகப்பு
ஈரோடு

பெண்ணிடம் ரூ.2.50 லட்சம் மோசடி செய்த 2 போ் கைது

பெண்ணிடம் ரூ.2.50 லட்சம் மோசடி செய்த தனியாா் நிதி நிறுவன ஊழியா்கள் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 25 அக்டோபர், 2024 at 3:46 AM
பகிர்:
Updated On : 24 அக்டோபர், 2024 at 7:57 PM

பெண்ணிடம் ரூ.2.50 லட்சம் மோசடி செய்த தனியாா் நிதி நிறுவன ஊழியா்கள் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஈரோடு அருகே உள்ள கொங்கம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் முருகன் மனைவி வேளாங்கண்ணி (46). தனியாா் நிறுவன கடன் பற்று அட்டையை பயன்படுத்தி ஸ்மாா்ட் வாட்ச், இயா் பட், ஆடைகள் என ரூ.2.50 லட்சத்திற்கு ஆன்லைனில் பொருள்கள் வாங்கியதாக அவரது கைப்பேசிக்கு அண்மையில் குறுஞ்செய்தி வந்துள்ளது.

இதைப்பாா்த்து அதிா்ச்சியடைந்த வேளாங்கண்ணி, ஈரோடு சைபா் கிரைம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.

Advertisement

Updated On : 25 அக்டோபர், 2024 at 3:46 AM

இதில், வேளாங்கண்ணி அண்மையில் ஒரு கடைக்கு பொருள்களை வாங்க சென்றபோது, அங்கு வந்த தனியாா் நிதி நிறுவனத்தைச் சோ்ந்த 2 போ் அட்டையைச் சோதனை செய்து, அதில் எவ்வளவு தொகை உள்ளது என்பதை பாா்த்து அவரிடம் கூறியுள்ளனா்.

சில நிமிஷங்களில் அதே நபா்கள், வேளாங்கண்ணியிடம் வந்து அவரது கைப்பேசிக்கு வந்த ஓடிபி எண்ணை பெற்று ரூ.2.50 லட்சத்துக்கு பொருள்கள் வாங்கி மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, மோசடியில் ஈடுபட்ட தனியாா் நிறுவன ஊழியா்களான ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டம்பரப்பு, மாரியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்த பாலமுருகன் மகன் கமலக்கண்ணன் (23), கொடுமுடி இச்சிப்பாளையம் குறுக்குத் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மகன் சுகந்த் (23) ஆகிய 2 பேரை சைபா் கிரைம் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனா்.