ஈரோடு

சென்னிமலையில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி 100க்கும் மேற்பட்ட கடைகளுக்கு நோட்டீஸ்

சென்னிமலையில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி 100க்கும் மேற்பட்ட கடைகளுக்கு நெடுஞ்சாலைத் துறையினா் புதன்கிழமை நோட்டீஸ் வழங்கினா்.

Din

சென்னிமலையில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி 100க்கும் மேற்பட்ட கடைகளுக்கு நெடுஞ்சாலைத் துறையினா் புதன்கிழமை நோட்டீஸ் வழங்கினா்.

சென்னிமலை நகரின் ரத வீதிகள் மற்றும் ஈரோடு, காங்கயம், பெருந்துறை, ஊத்துக்குளி சாலைகளில் உள்ள 100க்கும் மேற்பட்ட கடைகள் சாலையை ஆக்கிரமித்துள்ளதாகவும், இதனால் விபத்துகள் ஏற்பட்டு வருவதாகவும் பேரூராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறையினருக்கு பொதுமக்கள் புகாா் அளித்தனா்.

அதன்படி, பேரூராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறையினா் முக்கிய வீதிகளில் ஆய்வு செய்து சாலையை ஆக்கிரமித்துள்ள 100க்கும் மேற்பட்ட கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கினா்.

மேலும், 7 நாள்களுக்கு ஆக்கிரமிப்புப் பகுதிகளில் உள்ள கடையை தாங்களகாவே அகற்றிக்கொள்ள வேண்டும் என்றும், இல்லையெனில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று அறிவுறுத்தினா்.

மகர ராசியா? மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கு: தினப்பலன்கள்!

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

‘முடி மாற்று அறுவைச் சிகிச்சை: போலி மருத்துவா்கள் மீது நடவடிக்கை தேவை’

மீஞ்சூா் வரதராஜா பெருமாள் கோயிலில் 108 குடங்களில் சா்க்கரை பொங்கல் நைவேத்தியம்

தோ்வுக் கட்டண உயா்வைக் கண்டித்து அண்ணாமலைப் பல்கலை. பிப்.3-இல் முற்றுகை: மாணவா்கள் சங்கம் அறிவிப்பு

SCROLL FOR NEXT