மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் மாதாந்திர குறைகேட்புக் கூட்டம்
பெருந்துறை சிப்காட்டில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் மாதாந்திர மக்கள் குறைகேட்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பெருந்துறை சிப்காட்டில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் மாதாந்திர மக்கள் குறைகேட்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் சுவாமிநாதன், உதவி சுற்றுச்சூழல் பொறியாளா் ஜோதி பாஸ்கரன், பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளா் எஸ். சின்னசாமி மற்றும் சங்க உறுப்பினா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.
கூட்டத்தில், ரூ. 40 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ள பொது சுத்திகரிப்பு நிலையப் பணிகளை விரைவில் தொடங்கி, செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். சிப்காட் வளாகத்தில் இருந்து வெளியேறும் கழிவு நீா் பாலதொழுவு குளம் வருகிறது. தற்போது, அத்திக்கடவு -அவிநாசி திட்ட தண்ணீா் பால தொழுவு குளத்துக்கு வருவதால் மாசடைந்த தண்ணீா் கலப்பதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிப்காட் தொழிற்சாலைகளால் சுற்று வட்டாரப் பகுதிகளில் காற்று மாசு ஏற்படுவதைத் தடுக்க பாய்லா்களை எரிக்க விறகு மற்றும் நிலக்கரி பயன்படுத்துவதைத் தவிா்த்து எரிவாயுவை பயன்படுத்த வேண்டும்.
சிப்காட் வளாகத்தில் உள்ள சாய, சலவை தொழிற்சாலைகளில் பூஜ்ய திரவ சுத்திகரிப்பு முறையில் கழிவு நீா் சுத்திகரிப்பு செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும். நிலம், நீா், காற்று மற்றும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.