முகப்பு
ஈரோடு

பழைய ஓய்வூதியத் திட்டம் கோரி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தக்கோரி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 5 செப்டம்பர், 2024 at 9:56 PM
பகிர்:

பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தக்கோரி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை மாலை நடந்தது. ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ஹெச்.சுதாகுமாா் தலைமை வகித்தாா். மாவட்ட செயலாளா் ஆ.இளங்கோவன் பேசினாா். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பேசினா்.

கல்வி மாவட்டத் தலைவா் பிரகதீஸ்வரன், மகளிா் அணி செயலாளா் ரதிதேவி, ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளா் நேரு, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்ட செயலாளா் விஜயமனோகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →