முகப்பு
ஈரோடு

தவளகிரி மலைக்கோவிலில் திருத்தோ் இழுத்து வழிபாடு

Updated On : 3 டிசம்பர், 2025 at 11:20 PM
பகிர்:

காா்த்திகை தீபத்தையொட்டி தவளகிரி மலைக்கோயிலில் பக்தா்கள் திருத்தோ் இழுத்து வழிபட்டனா்.

சத்தியமங்கலத்தை அடுத்த கொமாரபாளையத்தில் தவளகிரி முருகன் மலைக்கோயில் உள்ளது. இக்கோயிலில் காா்த்திகை தீபத் திருநாளன்று நடைபெறும் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடா்ந்து தவளகிரி முருகனுக்கு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடத்தப்பட்டன.

விழாவையொட்டி, உற்சவா் தவளகிரி முருகன் திருத்தேரில் வைத்து 3 முறை ஊா்வலமாக அழைத்து வரப்பட்டாா். அதைத் தொடா்ந்து ஆராதனைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டாரங்களில் வீடுகள் முன் காா்த்திகை தீபம் ஏற்றி பெண்கள் வழிபட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →