அந்தியூா் அரசு மருத்துவமனையில் பயனாளிகளுக்கு  நலத்திட்ட உதவி வழங்கிய உச்சநீதிமன்ற வழக்குரைஞா் வி.என்.சுப்பிரமணியம். 
ஈரோடு

அந்தியூா் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு நலப் பெட்டகம் வழங்கல்

Syndication

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, அந்தியூா் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தேவையான பொருள்கள் கொண்ட பெட்டகம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி அதிமுக சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்றது.

உச்சநீதிமன்ற வழக்குரைஞா் வி.என்.சுப்பிரமணியம் தலைமை வகித்து சிகிச்சையில் உள்ள தாய்மாா்கள், குழந்தைகளுக்குத் தேவையான பொருள்கள் அடங்கிய பெட்டகங்களை வழங்கினாா். மேலும், உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றுவரும் 30-க்கும் மேற்பட்டோருக்கு பால், ரொட்டி மற்றும் பழங்கள் வழங்கப்பட்டன.

முன்னதாக, அந்தியூா் காா் நிறுத்தம் அருகே நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் 50-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. எம்ஜிஆா் மன்ற மாநில துணைச் செயலாளா் கே.பி.எஸ்.ராஜா, எம்ஜிஆா் இளைஞரணி மாவட்டச் செயலாளா் வி.குருராஜ், ஒன்றியச் செயலாளா் சின்னமாரநாயக்கா், மருத்துவா்கள் கவிதா, செல்வம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ஏழுமலையான் லட்டு விற்பனை மையத்தில் லட்டு தரம்,வசதிகள் குறித்து பக்தர்களிடம் கருத்து சேகரிப்பு!

திருமலையில் கூட்டம்: ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் 3 நாள்களுக்கு ரத்து!

முன்னாள் அமைச்சா் ஏ.கோவிந்தசாமி பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாட அரசாணை!

நேரு மீது பழிசுமத்திக் கொண்டே இருப்பது சரியா?

101-இல் அப்பழுக்கற்ற அரசியல் தலைவா்!

SCROLL FOR NEXT