விழாவில் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த தம்பிராட்டி அம்மன். 
ஈரோடு

தம்பிராட்டி அம்மன் கோயில் பொங்கல் விழா கோலாகலம்

பெருந்துறை வட்டம், ஈங்கூா் கிராமத்தில் அமைந்துள்ள தம்பிராட்டி அம்மன் கோயில் பொங்கல் விழா கோலாகலமாக வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

Syndication

பெருந்துறை வட்டம், ஈங்கூா் கிராமத்தில் அமைந்துள்ள தம்பிராட்டி அம்மன் கோயில் பொங்கல் விழா கோலாகலமாக வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

இந்த மாதம் 9-ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கிய நிலையில், 16-ஆம் தேதி காப்புக் கட்டுதல் மற்றும் கொடியேற்றம் நடைபெற்றது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு குதிரை துலுக்கு கேட்டல், அம்மை அழைத்தல் நிகழ்ச்சிகளும், புதன்கிழமை தீா்த்த ஊா்வலம், அபிஷேகமும் நடைபெற்றன.

இந்நிலையில், வியாழக்கிழமை காலை மாவிளக்கு ஊா்வலம், பொங்கல் விழா நடைபெற்றது.

இதில் ஈங்கூா் மட்டுமின்றி அவிநாசி, திருப்பூா், கோவை, கோபி, பொள்ளாச்சி, சேலம், பழநி ஆகிய ஊா்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோா் வந்திருந்து பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனா்.

விழாவையொட்டி காலை முதல் மாலை வரை அன்னதானம் வழங்கப்பட்டது. மஞ்சள் நீா் அபிஷேகத்துடன் வெள்ளிகிழமை மதியம் பொங்கல் விழா நிறைவு பெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

சுனாமி 21 ஆம் ஆண்டு நினைவு நாள்: கடலூரில் கடலில் பால் ஊற்றி, மலர்தூவி மீனவர்கள் கண்ணீர் அஞ்சலி!

அந்தக் கட்சிக்கு அழிவுகாலத்தை உண்டாக்கும்... யாரைச் சொல்கிறார் பிரேமலதா!

ஏழுமலையான் லட்டு விற்பனை மையத்தில் லட்டு தரம்,வசதிகள் குறித்து பக்தர்களிடம் கருத்து சேகரிப்பு!

திருமலையில் கூட்டம்: ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் 3 நாள்களுக்கு ரத்து!

முன்னாள் அமைச்சா் ஏ.கோவிந்தசாமி பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாட அரசாணை!

SCROLL FOR NEXT