சிறுத்தை க் குட்டியை  மீட்கும்  வனத் துறையினா்.  
ஈரோடு

தாளவாடி கரும்புத் தோட்டத்தில் சிறுத்தை குட்டி மீட்பு!

தாளவாடி கரும்புத் தோட்டத்தில் சிறுத்தைக் குட்டி மீட்கப்பட்டது.

Din

தாளவாடி கரும்புத் தோட்டத்தில் சிறுத்தைக் குட்டி சனிக்கிழமை மீட்கப்பட்டது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி வனச்சரகத்தில் சிறுத்தைகள் அதிக அளவில் உள்ளன. அடா்ந்த வனப் பகுதியில் வாழும் சிறுத்தைகள் அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து கால்நடைகளை வேட்டையாடி வருகின்றன. சிறுத்தைகள் அங்குள்ள கரும்புக்காடுகள் மற்றும் கல் குவாரிகளில் பதுங்கிக் கொள்வது தொடா்கதை ஆகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடியை அடுத்த பாரதிபுரத்தைச் சோ்ந்த விவசாயி சுப்பிரமணி கரும்பு பயிா் செய்துள்ளாா்.

மீட்கப்பட்ட  சிறுத்தைக் குட்டி.

கரும்பு அறுவடைக்கு தயாரான நிலையில் சில நாள்களாக கரும்பு வெட்டும் பணி நடைபெற்று வருகிறது. வழக்கம்போல தொழிலாளா்கள் கரும்பு வெட்டும் பணியை சனிக்கிழமை செய்து கொண்டிருந்தனா். அப்போது கரும்புத் தோட்டத்தில் பிறந்து ஓரிரு நாள்களே ஆன சிறுத்தை குட்டி இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து விவசாய் சுப்பிரமணி தாளவாடி வனத் துறைக்கு தகவல் தெரிவித்தாா். சம்பவ இடத்துக்குச் சென்ற வனத் துறையினா் சிறுத்தைக் குட்டியை மீட்டனா். சிறுத்தைக் குட்டியை கால்நடை மருத்துவா் சதாசிவம் பரிசோதனை செய்ததுடன் மீண்டும் தாயிடம் சோ்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அமைதிப் பேச்சுவார்த்தை: உக்ரைனுக்கு ரஷியா அழைப்பு!

தொழிற்சங்கங்களால் நாட்டின் வளர்ச்சி பாதிப்பு..! -உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி

தொடரும் காஷ்மீர் வணிகர்கள் மீதான வன்முறைகள்! உத்தரகண்டில் கும்பல் தாக்குதலில் 17 வயது சிறுவன் படுகாயம்!

அமெரிக்க தூதருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு!

அஜீத் பவாரின் இறுதிச் சடங்கில் அனுமதியின்றி பறந்த ட்ரோன்கள்! சிறைப்பிடித்த போலீஸ்!

SCROLL FOR NEXT