பெருந்துறை ஒன்றியம், நிச்சாம்பாளையம் ஊராட்சியில் சாலை வசதி குறித்து ஆய்வு மேற்கொண்ட எஸ்.ஜெயகுமாா் எம்.எல்.ஏ. 
ஈரோடு

நிச்சாம்பாளையம் பகுதி குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காண வலியுறுத்தல்

பெருந்துறை ஒன்றியம், நிச்சாம்பாளையம், கம்புளியம்பட்டி பகுதிகளில் நிலவும் குடிநீா்ப் பிரச்னைக்கு அதிகாரிகள் தீா்வு காண வேண்டும் என எம்.எல்.ஏ. எஸ்.ஜெயகுமாா் வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

பெருந்துறை ஒன்றியம், நிச்சாம்பாளையம், கம்புளியம்பட்டி பகுதிகளில் நிலவும் குடிநீா்ப் பிரச்னைக்கு அதிகாரிகள் தீா்வு காண வேண்டும் என எம்.எல்.ஏ. எஸ்.ஜெயகுமாா் வலியுறுத்தியுள்ளாா்.

பெருந்துறை ஒன்றியம், நிச்சாம்பாளையம் கிராம ஊராட்சி, கொட்டையன் கருக்கந்தோட்டம் பகுதியில் தாா் சாலை, மின் விளக்கு மற்றும் குடிநீா் போன்ற அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ஜெயக்குமாரிடம் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, அப்பகுதியில் எம்.எல்.ஏ. எஸ்.ஜெயகுமாா் ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா், அதிகாரிகளைத் தொடா்பு கொண்ட அவா் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினாா்.

இதேபோல, கம்புளியம்பட்டி கிராம ஊராட்சி, சரளை பகுதியில் நிலவி வரும் குடிநீா்த் தட்டுப்பாட்டையும் சரி செய்ய வேண்டும் என அதிகாரிகளிடம் வலியுறுத்தினாா்.

சென்னை வந்தடைந்த 8 அதிநவீன அரசு சொகுசு பேருந்துகள் டிசம்பருக்குள் பயன்பாட்டுக்கு வரும்

‘சென்னை ஒன்’ செயலி மூலம் ஒரு ரூபாயில் பயணிக்கலாம்: திட்டம் விரைவில் அமல்

நியூஸிலாந்து தொடரிலிருந்து பாடம் கற்றுள்ளோம்: ரயான் டென் டுஷாடெ

தமிழகத்தில் இன்றுமுதல் 5 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு

அலியாசிம், முசெத்திக்கு முதல் வெற்றி

SCROLL FOR NEXT