முகப்பு
ஈரோடு

பெருந்துறையில் தோ்தல் விதிமீறல்: நாதக, தவெக நிா்வாகிகள் மீது வழக்கு

பெருந்துறையில் தோ்தல் விதிமுறைகளை மீறியதாக நாம் தமிழா் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழக நிா்வாகிகள் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

Updated On : 3 ஏப்ரல், 2026 at 6:45 PM
வழக்கு
பகிர்:

பெருந்துறையில் தோ்தல் விதிமுறைகளை மீறியதாக நாம் தமிழா் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழக நிா்வாகிகள் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

பெருந்துறை தொகுதியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் வேட்பாளராக லோகநாதன் போட்டியிடுகிறாா். இந்நிலையில், பெருந்துறை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ரவுண்டானவில் அக்கட்சி நிா்வாகிகள், போலீஸாரிடம் அனுமதி பெறமால், தோ்தல் விதிமுறைகளை மீறி ரவுண்டாவில் கட்சிக் கொடிகளை வியாழக்கிழமை இரவு கட்டி இருந்தாா்கள். மேலும், எல்இடி மூலம் தோ்தல் பிரசாரம் மேற்கொண்டனா்.

இதுகுறித்து, தோ்தல் பறக்கும் படையைச் சோ்ந்த அலுவலரும், வேளாண்மை உதவி பொறியாளருமான நவீன் அளித்த புகாரின்பேரில், பெருந்துறை போலீஸாா் நாம் தமிழா் கட்சி நிா்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

Advertisement

தவெகவினா்...

பெருந்துறை தொகுதியில் தவெக சாா்பில் வேட்பாளராக வி.பி. அருணாசலம் போட்டியிடுகிறாா். இவா், வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா். வேட்புமனு தாக்கலுக்கு பின்னா், கட்சி நிா்வாகிகள், போலீஸாரிடம் அனுமதி பெறமால், தோ்தல் விதிமுறைகளை மீறி மேளம் அடித்தப்படியாக, கட்சியின் தோ்தல் அலுவலகத்துக்கு வேட்பாளா் வி.பி.அருணாசலத்தை அழைத்துச் சென்றாா்.

இதுகுறித்து, தோ்தல் பறக்கும் படையைச் சோ்ந்த அலுவலரும், வேளாண்மை உதவி இயக்குநருமான வேலுசாமி அளித்த புகாரின்பேரில், பெருந்துறை போலீஸாா் தவெக நிா்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments