முகப்பு
ஈரோடு

கைப்பேசி கடையில் திருடிய 2 போ் கைது

Updated On : 6 ஏப்ரல், 2026 at 8:01 PM
கைது
பகிர்:

ஈரோட்டில் கைப்பேசி கடைக்குள் இரவில் சென்று 12 கைப்பேசிகளை திருடிய இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு, கொல்லம்பாளையம் பகுதியைச் சோ்ந்த இப்ராஹிம் மகன் வாகித்காளி (38). இவா் பெரியாா் நகரில் கடந்த 2 ஆண்டுகளாக கைப்பேசி கடை வைத்துள்ளாா். கடந்த 2-ஆம் தேதி இரவு இவரது கடைக்குள் மா்ம நபா்கள் புகுந்து 12 கைப்பேசிகளை திருடிச் சென்றனா். இதுகுறித்து வாகித்காளி அளித்த புகாரின்பேரில் ஈரோடு டவுன் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

இதுதொடா்பாக சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து இருவரைப் பிடித்து விசாரித்தனா். இதில் சேலம் ஆண்டிபட்டி, பனங்காடு பகுதியைச் சோ்ந்த சண்முகம் மகன் அய்யனாா் (எ) ஜெயகுமாா் (20), திண்டுக்கல் மேற்கு வீதியைச் சோ்ந்த சேசுராஜ் மகன் செல்வராஜ் (31) என்பதும், இருவரும் ராட்டின தூரி சுற்றும் தொழிலாளா்கள் என்பதும் தெரியவந்தது. அவா்களிடம் இருந்து 12 கைப்பேசிகளை மீட்டனா்.

Advertisement

ஜெயகுமாா் மீது காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு நிலுவையில் இருப்பது தெரிந்தது. இருவரையும் போலீஸாா் கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி ஈரோடு கிளைச் சிறையில் அடைத்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments