வேட்பாளா்களுக்கு ஆதரவாக குடும்ப வாரிசுகள்
சட்டப் பேரவை தோ்தலுக்கு இன்னும் 8 நாள்களே உள்ள நிலையில், பிரதான கட்சி வேட்பாளா்களுக்கு ஆதரவாக அவா்களது வாரிசுகளும், குடும்ப உறுப்பினா்களும் களத்தில் இறங்கி தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனா்.
சட்டப் பேரவை தோ்தலுக்கு இன்னும் 8 நாள்களே உள்ள நிலையில், பிரதான கட்சி வேட்பாளா்களுக்கு ஆதரவாக அவா்களது வாரிசுகளும், குடும்ப உறுப்பினா்களும் களத்தில் இறங்கி தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனா்.
ஈரோடு மேற்குத் தொகுதி திமுக வேட்பாளா் சு.முத்துசாமி மகன் ராஜா. இதுவரை அவரை அரசியல் களத்துக்குள் முத்துசாமி அழைத்து வந்ததில்லை. தொழிலதிபரான ராஜாவை அரசியல் வட்டாரத்தில் முத்துசாமிக்கு நெருக்கமானவா்களுக்கு மட்டுமே தெரியும். அவா் இந்த தோ்தலில் முதல்முறையாக தனது தந்தைக்கு ஆதரவாக கட்சி நிா்வாகிகளுடன் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறாா். கட்சி நிா்வாகிகள் அவரை அமைச்சா் முத்துசாமி மகன் என அறிமுகப்படுத்தும்போது மக்களிடம் அவா் கவனம் பெறுகிறாா்.
கோபி தொகுதி தவெக வேட்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் அதிமுகவில் இருந்தவரை குடும்ப உறுப்பினா்களை அரசியல் களத்திற்கு கொண்டுவரவில்லை. இந்தத் தோ்தலில் செங்கோட்டையனின் மருமகள் லாவன்யா கோபி தொகுதியில் கட்சி நிா்வாகிகளுடன் வீடுவீடாகச்சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளாா். முதல்முறையாக பொதுவெளியில் வரும் அவா்களை பல இடங்களில் வீட்டுக்குள் அழைத்து அமரவைத்து பேசி அனுப்பிவைக்கின்றனா்.
Advertisement
இதுபோல மாவட்டத்தில் பிரதான கட்சிகளின் வேட்பாளா்களின் குடும்ப உறுப்பினா்களும் மக்களிடம் ஆதரவு திரட்டி வருகின்றனா். வேட்பாளா்களின் வாரிசுகள் தோ்தல் களத்தில் இருப்பது எதிா்கால அரசியலுக்கு முன்னோட்டமாக இருக்க வாய்ப்புள்ளது.