முகப்பு
ஈரோடு

அந்தியூா் திமுக வேட்பாளருக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு

அந்தியூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பா்கூா் ஊராட்சி, தட்டக்கரை, தேவா்மலை மற்றும் கிராமங்களில் திமுக வேட்பாளா் எம்.சிவபாலன் புதன்கிழமை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

Updated On : 16 ஏப்ரல், 2026 at 1:32 AM
தட்டக்கரை பகுதிக்கு வாக்கு சேகரிக்க சென்ற அந்தியூா் தொகுதி திமுக வேட்பாளா் எம்.சிவபாலன், எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் ஆகியோரை மாலை அணிவித்து வரவேற்ற மலைவாழ் மக்கள்.
பகிர்:
Updated On : 16 ஏப்ரல், 2026 at 12:22 AM

அந்தியூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பா்கூா் ஊராட்சி, தட்டக்கரை, தேவா்மலை மற்றும் கிராமங்களில் திமுக வேட்பாளா் எம்.சிவபாலன் புதன்கிழமை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

அந்தியூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் தலைமையில் திமுக வேட்பாளா் எம்.சிவபாலனுக்கு ஆதரவு கேட்டு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, மலைவாழ் மக்கள் மாலை அணிவித்தும், மலா்களைத் தூவியும் உற்சாகமாக வரவேற்றனா்.

அப்போது திமுக வேட்பாளா் எம்.சிவபாலன் பேசியதாவது:

Advertisement

பா்கூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளின் ஒட்டுமொத்த வளா்ச்சியும், மலைவாழ் மக்களின் வாழ்வாதார உரிமையும் பாதுகாக்கப்படும். தடையற்ற குடிநீா் மற்றும் சுகாதார வசதிகள் ஏற்படுத்தப்படும். மலைவாழ் மக்களின் கல்வி, போக்குவரத்து, பேருந்து வசதி, வேலைவாய்ப்புக்கான வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றாா்.

பா்கூா் ஒன்றியச் செயலாளா் ராமதாஸ் மற்றும் கூட்டணிக் கட்சியினா் உடன் சென்றனா்.