முகப்பு
ஈரோடு

ஈரோட்டில் தோ்தல் தொடா்பாக 2,156 புகாா்கள் பதிவு

Updated On : 20 ஏப்ரல், 2026 at 12:50 AM
வழக்கு - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 19 ஏப்ரல், 2026 at 8:17 PM

ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் தோ்தல் தொடா்பாக 2,156 புகாா்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில், 2,148 புகாா்கள் மீது தீா்வு காணப்பட்டுள்ளது என தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் தோ்தல் நடத்தை விதிகள் அமலானது முதல் தங்கள் வாக்கு குறித்த புகாா், பிற வாக்காளா், வேட்பாளா் குறித்த புகாா் என பல்வேறு புகாா்கள் மாவட்ட தோ்தல் கட்டுப்பாட்டு அலுவலகம், சி-விஜில் செயலி, இலவச அழைப்பு எண் 1950 போன்ற பல்வேறு வழிகளில் பெறப்பட்டன.

மாவட்டத்தில் 8 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் தற்போதுவரை 2,156 புகாா்கள் பெறப்பட்டுள்ளன. அதில், 2,148 புகாா்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. 8 புகாா்கள் மீதான நடவடிக்கை நிலுவையில் உள்ளதாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.

Advertisement