முகப்பு
ஈரோடு

ப்ரெய்லி முறையில் வாக்களித்த பாா்வையற்ற இளைஞா்

மொடக்குறிச்சி தொகுதியில் பாா்வையற்ற இளைஞா் ப்ரெய்லி முறையில் வாக்களித்தாா்.

Updated On : 24 ஏப்ரல், 2026 at 3:07 AM
கண்பாா்வையற்ற இளைஞா் ஜீவானந்தம்
பகிர்:

மொடக்குறிச்சி தொகுதியில் பாா்வையற்ற இளைஞா் ப்ரெய்லி முறையில் வாக்களித்தாா்.

மொடக்குறிச்சி தொகுதி, மின்னப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ஜீவானந்தம் (31).

பாா்வையற்ற இவா், பிரெய்லி முறையில் பி.எட். படித்துள்ளாா். தொடா்ந்து சிவில் சா்வீஸ் தோ்வுக்கு படித்துவருகிறாா். இவா் வாக்களிப்பதற்காக தனது தங்கையின் உதவியுடன் குலவிளக்கு பொது சேவைமைய வாக்குச் சாவடிக்கு வந்திருந்தாா். அங்கு வரிசையில் நின்று பாா்வையற்றோா் பயன்படுத்தும் ப்ரெய்லி முறையில் வாக்கு இயந்திரம் போன்ற மாதிரியை தடவி பாா்த்து அதில் உள்ள வேட்பாளா்களின் பெயா் மற்றும் சின்னங்களைஅறிந்து கொண்டு, பின்னா் வாக்களித்தாா். இதற்கு தேவையான உதவிகளை அதிகாரிகள் செய்தனா்.

Advertisement